வாகன விபத்துகளில் இல்லத்தரசிகள் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ, அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதனால் இல்லத்தரசிகளின் உழைப்பை வெறும் வீட்டு வேலைகளாக மட்டும் சுருக்கிவிட முடியாது என்றும், அவர்கள் மனித வளத்தையும் சமூகத்தையும் கட்டமைக்கும் “தேசத்தை உருவாக்குபவர்கள்” என்றும் நீதிமன்றம் புகழாரம் சூட்டியுள்ளது.
மேலும் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், ஒரு இல்லத்தரசி குடும்பத்திற்காகச் செய்யும் உள்நாட்டுப் பராமரிப்பு மற்றும் சேவைகளின் இழப்பை மதிப்பிடுவதற்காக, குறைந்தபட்சம் மாதத்திற்கு 30,000 ரூபாய் என்ற தொகையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நிர்ணயித்துள்ளது.
#BREAKING| ‘Homemakers Are Nation Builders’ : Supreme Court Quantifies Homemaker Contribution As Rs 30K Per Month In Motor Accident Claims |@1Simranbakshi #SupremeCourt https://t.co/4ejXnb6J0i
— Live Law (@LiveLawIndia) June 11, 2026
“>
இந்தத் தீர்ப்பின்படி, விபத்தில் உயிரிழந்த இல்லத்தரசிக்கு நேரடி மாத வருமானம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க முடியாது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கமான இழப்பீட்டு விதிகளுடன், இந்த ‘உள்நாட்டுச் சேவை இழப்புக்கான’ 30,000 ரூபாயும் கூடுதல் அடிப்படையாகச் சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படும்.
மேலும், இந்த வழக்குகளைத் தாமதமின்றி விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அனைத்து மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளும் இதனைச் சரியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களின் கணக்கிடப்படாத வீட்டு உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய சட்டப்பூர்வ அங்கீகாரமாக இந்த வரலாற்றுத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
