இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30-ம் தேதி ரிஷப் பண்ட் அதிகாலை நேரத்தில் காரில் சென்ற போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட் உயிர் தப்பினார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் நடை பயிற்சி செய்யும் வீடியோவை ரிஷப் பண்ட் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் நீங்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என கூறி வருகிறார்கள்.

https://twitter.com/RishabhPant17/status/1635961020773552133?t=4JX2Fxz94wDXd4z3DD1N4w&s=19