நேபாளத்தில் உள்ள கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம்-அரபு அமிரகம் இடையேயான உலகக் கோப்பை லீக் தொடர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.

அதன் பிறகு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே உள்ள மரத்தின் மீது ஏறி நின்றும் பேருந்தின் மீது நின்றும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.