ஐபிஎல் போட்டிகள் மார்ச் 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி மும்பை அணியில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதன்பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிச்சர்ட்சன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பர்ஷித் கிருஷ்ணா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர்.