காசியாபாத்திலுள்ள டெல்லி-மீரட் இடையிலான விரைவுச் சாலையில் புல்லட் வாகனத்தில் பீர் குடித்தபடி இளைஞர் ஒருவர் வண்டி ஓட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
அந்த பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர் குமார் என தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறியதாக அனுஜ் சோன் சுரேந்தர் குமார் என்பவருக்கு அபராதம் தொகையை காவல்துறையினர் விதித்துள்ளனர். தற்போது பைக்கில் பீர் குடித்தபடி இளைஞர் வண்டி ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
बुलेट है कोई बात नहीं, सब रास्ता देंगे, लेकिन खुल्लेआम बियर पीते हुए.. बिना हेलमेट.. बुलेट चलाओगे तो!! रील बनाने के चक्कर में 31000 रुपए का चालान आ गया न…. अब झेलो.. महंगी पड़ी ये रील.. इतना तो एड भी नहीं मिल रहा होगा यू ट्यूब से भाई को.. pic.twitter.com/cSEUMsWGfx
— Vivek K. Tripathi (@meevkt) January 20, 2023