செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழ்நாட்டுல சமீபத்தில் பாத்தீங்கன்னா….  அரிசி விலை 6 ரூபாய் ஏத்தி இருக்காங்க. இன்னும் ஒரு 12 ரூபாய் ஏற இருப்பதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம்,  கடந்த ஆண்டு குருவை – சம்பா இரண்டு சாகுபடியும் குறைந்திருந்த நிலையில்,  குருவையில பார்த்தீங்கன்னா….  ரெண்டு லட்சம் ஏக்கர் குறுவை நீர் வராத காரணத்தினால் கருகிய காரணத்தினால்,  அதேபோன்று சம்பாவும் குறைச்சலாக நெல் சாகுபடி செய்திருக்கிறார்கள். அதனால இன்னும் விலைவாசி உயர இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும் அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழக அரசினுடைய நீண்ட நாள் கோரிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று..  ஆந்திராவும் தொடங்கி விட்டார்கள்,  தெலுங்கானாவில் விரைவில் அறிவிப்போம் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பிஹாரில் முடித்திருக்கிறார்கள். இதெல்லாம் செய்து முடித்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இன்னும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது கண்டிக்கத்தக்கது, இது வருத்தம் எல்லாம் கிடையாது,  இது கண்டிக்கத்தக்கது.

அப்போ நீங்க சமூகநீதி பற்றி  பேசாதீங்க…  உங்களுக்கு பேசுறதுக்கு தகுதி கிடையாது.  திமுக அரசுக்கு சமூக நீதி பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது.  ஏன்னா இந்தியாவுல இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சாதியின் அடிப்படையில் கணக்கெடுப்பு 1931 தான் கடைசியாக வெள்ளையர்கள் காலத்தில் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.