எம்ஜிஆர் குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக அவினாசியில் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆ. ராசாவுக்கு பாடம் புகட்டும் வரை அதிமுக ஓயாது என்றும், கோவை, நீலகிரி, திருப்பூரைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கோரிக்கை வைத்துள்ளார்.