தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர் பலரிடமிருந்து கடன் வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கேட்டுள்ளனர். இதனால் கருப்பையா தனது மகனை கண்டித்துள்ளார்.

ஆனாலும் மகன் எனக்கு மதுதான் முக்கியம் என தொடர்ந்து குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பையா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.