ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம்  நெல் கொள்முதல் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று கொடுக்கப்படுகிறது. இந்த முறையால்  ஏற்றுக்கூலி, இறக்குகூலி, வண்டி வாடகை, கமிஷன் இல்லாமல் அதிகம்  லாபத்தை விவசாயிகள் பெறுகின்றனர்.

இதனையடுத்து 727 மூடை நெல் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்துக்கு விவசாயிகளின்  விளைநிலங்களிலேயே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் ஒரு மூடைக்கு கூடுதலாக 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை இடைத்தரகர் இன்றி அதிக லாபத்திற்கு விற்று பயன் பெற்று உள்ளனர். ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளதாவது, பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட பகுதியில் மிளகாய், பருத்தி சாகுபடி காலம் என்பதால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறியுள்ளார்.