ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரத்தில் பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன்
ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சியில் மீன் வளத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 30 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன், களப்பணியாளர் தேவநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி….!!!
Related Posts
மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!
1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…
Read more“பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்”… உரிமையாளர் உட்பட 3 பேர் கைது…!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து…
Read more