அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் பலரும் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகிறார்கள். அதன்படி சீதையின் பிறந்த மண்ணாக கருதப்படும் நேபாளத்தின் ஜனக்புரி ஜானகி கோவிலிலிருந்து 30 வாகனங்களில் 3000 வகை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் தங்கம், வெள்ளியில் தயாரான பாதுகைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளது. சீதை சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடும் இலங்கையிலிருந்து பெரிய வடிவிலான பாறை அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பாறையில் சீதை சிறை வைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஓவியமாக உள்ளன.

குஜராத்தின் வதோதராவிலிருந்து 108 அடி நீளத்தில் தூபம் போடுவதற்கான குச்சிகள் அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் பாஜக அரசு சார்பாக 44 அடி உயர பித்தளை கொடிக்கம்பம் மற்றும் ஆறு சிறிய கொடி கம்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவில் இருந்து 2,100 கிலோ எடை கொண்ட கோவில் மணி தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோவில் இருந்து அலோக்குமார் ஷாஜூ என்ற காய்கறி வியாபாரி வித்யாசமான கடிகாரத்தை அனுப்பியுள்ளார். சூரத் வைர வியாபாரி ஐந்தாயிரம் அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ராமர் கோவில் வடிவழான வெள்ளி ஆபரணத்தை அனுப்பியுள்ளார்.