தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். இவர் ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் பொன்னம்பலத்துக்கு அவருடைய சகோதரர் மெல்ல கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்ததால் சிறுநீரகம் செயலிழந்தது‌. இதனால் நடிகர் பொன்னம்பலத்துக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. நடிகர் பொன்னம்பலத்துக்கு தனுஷ், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் உதவினர். அதன் பிறகு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிகர் பொன்னம்பலத்தை அப்போலோ மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுமாறு கூறியதோடு 45 லட்ச ரூபாய் சிகிச்சைக்காகவும் கொடுத்து உதவினார். நடிகர் பொன்னம்பலம் தான் தம்பி போல் நினைத்த அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தனக்கு உதவி செய்யாததாக அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் பொன்னம்பலம் ரஜினி தனக்கு உதவி செய்வதாக கூறிவிட்டு வெறும் ரூ. 50,000 மட்டுமே கொடுத்து ஏமாற்றி விட்டார் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரஜினி மொத்த மருத்துவ செலவுகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு முதலில் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பிறகு எந்த பண உதவியும் செய்யவில்லையாம். நடிகர் ரஜினியின் மனைவி லதா கவலைப்படாதீர்கள் உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு கடைசியில் பொன்னம்பலத்தை அனுமதிக்க அரசு மருத்துவமனையை தேடியதாக  கூறியுள்ளார். அரசு மருத்துவமனையை தான் குறை சொல்லவில்லை எனவும் ஆனால் நான் அங்கு சேர்ந்தால் குணமாக 3 வருடங்கள் ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ரஜினி பற்றி பொன்னம்பலம் இப்படி ஒரு விஷயத்தை சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.