தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஆஸ்கார் விருதையும் வென்றது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று நடிகர் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்சி 15 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது. இந்நிலையில் நடிகர் ராம்சரணின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் ராம்சரணின் மொத்த சொத்து மதிப்பு 1500 கோடியாம். ஏற்கனவே ராம்சரணின் மனைவி உபாசானாவின் சொத்து மதிப்பு மட்டும் 2500 கோடி என சமீபத்தில் தகவல் வெளியானது. இதுபோக நடிகர் சிரஞ்சீவியின் சொத்துக்கள் அனைத்தும் நடிகர் ராம்சரணுக்கு தான் சொந்தம். நடிகர் ராம்சரண் ஒரு திரைப்படத்தில் நடிக்க 40 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். அதன் பிறகு கொனிடேலா புரொடெக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

நடிகர் ராம்சரண் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருக்கிறார். இவர் ஒரு விளம்பரத்திற்கு 1.8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். இது போக ரூடுஜெட் என்ற விமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் ராம்சரண் நடிப்பது மட்டுமின்றி பல தொழில்களை செய்து வருவதால் அவருடைய மொத்து சொத்து மதிப்பு 1500 கோடியாம். இவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 40 கோடி மதிப்பில் பெரிய பங்களா இருப்பதோடு பல விலை உயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.

நடிகர் ராம்சரண் பிரபல தொழிலதிபரின் மகளான உபசானாவை திருமணம் செய்து கொண்டார். உபசானா அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். உபாசனாவிடம் பல விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய வைரத்தை நடிகை தமன்னாவுக்கு பரிசாக உபாசனா கொடுத்துள்ளார். மேலும் நடிகர் ராம்சரண் மற்றும் அவரின் மனைவியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.