ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடைபெறயிருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது தொகுதியான வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. அறிவிப்பு வந்த பிறகு பிரியங்கா போட்டியிடுவது குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.