காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.’

இந்நிலையில் ராகுல் காந்தி இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்திய சட்ட விதிகளின்படி சிறை தண்டனை முடிந்து 6 ஆண்டுகளுக்கு குற்றவாளி எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. அதனடிப்படையில் மொத்தம் 8 ஆண்டுகள் ராகுலுக்கு தடை ஏற்பட்டிருக்கிறது.