காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.’

இந்நிலையில் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க சிறைக்கு வேண்டுமென்றாலும் செல்வோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கை கூறியுள்ளார். ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் தொடர்பாக பேசிய அவர், நாங்கள் உண்மையை பேசுவதை பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை. ராகுலை வீழ்த்த பாஜக அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டது. இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுக்கும் என கூறினார்.