சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுர்குஜாவில், நமன் ராஜ்வாடே என்ற 5 வயது சிறுவன் “குழந்தை காவலராக” நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்த சிறுவனின் தந்தை சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் இறந்து விட்டதால் கருணை பணி நியமனத்தின் கீழ் இந்த பதவி சிறுவனுக்கு வழங்கப்பட்டது. அதாவது, சிறுவனுக்கு 18 வயதாகும் போது முழு அளவிலான கான்ஸ்டபிள் பொறுப்பு வழங்கப்படும். அதுவரையிலும் கான்ஸ்டபிள் சம்பளத்தில் பாதி உதவி தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.