
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, அருள் ஆறுமுகம் எட்டு வழி சாலை போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். 300 கிலோ மீட்டர் தொலைவிற்கான போராட்டம் அந்த போராட்டம். அந்த போராட்டம் தான் அதிமுக ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தது. 2021 தேர்தலுக்கு முன்பாக…. திருச்சியில் திமுக பெரிய மாவட்டம் நடந்தியது.அதே திருச்சியில்… அதே நாளில்…. மாலை பொழுதிலே இந்த போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து பெரிய மாநாட்டை நடத்தினோம்.
அதில் ஒருங்கிணைக்கக்கூடிய பணியில் அருள் ஆறுமுகமும் இருந்தார். அந்த விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் திரும்ப பெற வேண்டும். சாராயக்கடைகளை மூடுவதற்கு நடந்த போராட்டம்…. கூடங்குளம் போராட்டம்…. ஸ்டைலட்டுக்கு எதிரான போராட்டம்….. மீத்தேனுக்கு எதிரான போராட்டம்… கெயிலுக்கு எதிரான போராட்டம்… காவிரி உரிமைக்கான போராட்டம்….
நெய்வேலிக்கான போராட்டம் என்று தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே, ஒன்று சேர்ந்து நடந்த மாநாட்டில்… இந்த அதிமுக அரசு பொய்யாகப் புனைந்து வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். திமுக அரசு இரண்டரை வருடத்தில் இதுவரை செய்யவில்லை. அதைவிட மோசமாக, அந்தப் போராட்டத்தில் நின்றவர்களை இன்றைக்கு குண்டர் சட்டத்தில் அடைக்கிறீர்கள்…
அப்படி என்ன சார் நாங்க குண்டாஸ் ? தமிழ்நாட்டிலேயே போதைப் பழக்கம் அதிகமாகி இருக்கிறது. எத்தனை போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடியவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தீர்கள் ? எத்தனை பேரை அடைத்தீர்கள் ? போராடக் கூடியவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பது அசிங்கமாக இல்லையா ? அவனை அவமானம் படுத்தாலும் என நினைக்குறீங்களா? என கேள்வி எழுப்பினார்.