சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணையில் தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் அதிரடியாக விளையாடும் 36 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தை காண ஆவலாக ரசிகர்கள் இருந்த நிலையில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

.இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. மேலும் இதன் மூலம் 10-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.