சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 10-வது முறையாக சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. எம்.எஸ் தோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எம்.எஸ் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து தற்போது பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு ஓய்வு குறித்து தெரியாது.

அடுத்த ஐபிஎல் ஏலத்துக்கு இன்னும் 8-9 மாதங்கள் இருக்கிறது. எனவே அது பற்றி இப்போதே ஏன் யோசிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் சரி விளையாட்டிலோ அல்லது வெளியில் இருந்தோ நான் சென்னை அணிக்காக எப்போதும் இருப்பேன். இது தற்போது எனக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் 4 மாதங்களாகவே ஃபார்மில் இல்லை. ஜனவரி 31-ல் நான் என்னுடைய வேலையை முடித்துவிட்டு மார்ச் 2-ம் தேதி பயிற்சியை தொடங்கினேன். மேலும் ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று கூறினார்.