இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தற்போது திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையின் விளம்பர தூதராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதால் திரிபுராவில் இனி சுற்றுலாத்துறை புதிய உத்வேகம் எடுக்கும் என அம்மாநில முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் திரிபுரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை தூதராக கங்குலி நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் எனவும் கூறியுள்ளார்.