டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். கடந்த 5ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் வாயிலாக தன் 2023 சீசனை வெற்றிகரமாக துவங்கி உள்ளார். இப்போட்டியில் நீரஜ் 88.67 மீட்டர் தூரம் வரையிலும் எறிந்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில் ஈட்டி எறிதல் வீரர்கள் தர வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியவீரர் எனும் சாதனையை படைத்து உள்ளார். நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்து உள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் ௧,433 புள்ளிகள் உடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறார். அதன்பின் உலக தடகள வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் எனும் பெருமையை நீரஜ் பெற்றார்.