திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2 கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த எப்.எல்.3 எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ, எப்.எல்.11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் திறக்க தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.