தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு நேரத்தில் திரைப்படங்களை திரையிடக்கூடாது என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள சில தியேட்டர்களில் உத்தரவை மீறி நள்ளிரவு நேரத்தில் படத்தை திரையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு அதிகமாக கூடினார்கள்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் போலீசார் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை திரையிட்ட தியேட்டர்களின் உரிமையாளர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.