பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை பிரதமர் சென்னைக்கு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது.

அதன் பிறகு பூந்தமல்லி சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா அரசு வளைவில் திரும்பி புதிய ஆவடி சாலை வழியாக செல்ல வேண்டும். இதனை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கவனத்திற்கு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.