கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் இர்பான்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்கத்பீவி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பர்கத்பீவி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பர்கத்பீவியை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பர்கத்பீவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமணமான 8 மாதத்தில் பர்கத்பீவி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.