கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கிராமத்தில் 36 வயதுடைய பெண் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அவர் திருவண்ணாமலையில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து அந்த பெண்ணை சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக அவரது 15 வயது மகன் மோட்டார் சைக்கிள் அழைத்து சென்றார். இந்நிலையில் மேல் சிறுவள்ளூர் காப்புக்காடு அருகே சென்ற போது தாய்க்கும், மகனுக்கும் இடையே இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த மகன் தனது தாயை கத்தியால் குத்தினான். இதனால் படுகாயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 15 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படான். அந்த தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.