பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவை முற்றிலும் புறக்கணிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பு அறிவித்துள்ளது. நம்பத் தகுந்த தகவல்கள் ஆய்வு அடிப்படையில் இம் முடிவுக்கு வந்துள்ளோம். பிரபாகரன் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காட்டுவது வேதனை தருகிறது. விழிப்பு அரசியலின் முதற்படி என்ற பிரபாகரனின் வார்த்தையை நிலைநிறுத்தி செயல்படுவோம் என தெரிவித்துள்ளது.