தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்நிலையில் சென்னையில் வருகின்ற 3-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள போரூர், அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பணிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதில் அம்பத்தூரில் மெடிமிக்ஸ் அவென்யூ, அமிர்தா பிளாட்ஸ், கலைவாணர் காலனி, கலெக்டர் நகர், கிழக்கு முகப்பேர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

இதேபோன்று போரூரில் அகர மேல், மலையம்பாக்கம், நசரத்பேட்டை ஊராட்சி, செம்பரம்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெரு, முத்தமிழ் நகர், ரம்யா நகர், தனலட்சுமி நகர், தெள்ளியர் நகர், பரணிபுத்தூரில் ஒரு பகுதி, எஸ்ஆர்எம்ஸி, லீலாவதி நகர், நியூ காமாட்சி நகர், பட்டூர் பஜார் தெரு, பாத்திமா நகர், மாங்காடு, ஏ.ஆர் ரகுமான் அவென்யூ, ராயல் கேஸ்டல் குடியிருப்பு, திருமுடிவாக்கம் சிட்கோ, புத்தமேடு, திருமுடிவாக்கம் 1,5,6,14-வது பிரதான சாலை, திருமலை நகர், காமராஜ் நகர், ஏரிக்கரை, ஜீவா நகர், வசந்தபுரி, கேகே நகர், கரையான் சாவடி முழுதும், பூந்தமல்லி நகராட்சி முழுதும், ஆர்இ நகர், அம்பாள் நகர், மங்களா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் இந்த நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.