விருதுநகர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் விவரம் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் 3050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 3100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதன்பிறகு துவரம் பருப்பு புதுஸ் நாடு வகையின் விலை குறைந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் 100 கிலோ 11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ. 200 குறைந்து 11100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பாசிப்பருப்பு மற்றும் உருட்டு உளுந்து ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. மேலும் கடலை எண்ணெயின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்தது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.