சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிரெட்டிபட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 740 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக மாணவர்களிடையே சிறு சிறு மோதல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாணவர்கள் இரு பிரிவினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் அளித்த தகவலின் படி பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவர்களை கலைந்து போக செய்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து போலீசார் முன்னிலையில் தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.