விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் இரவு நேரத்தில் ஹோட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹோட்டலில் இருந்த ஏசி எந்திரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அலெக்ஸ் பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.