சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ஜோதி இராமலிங்கம் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கியுள்ளனர்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கடனை திரும்ப கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து தம்பதியினர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கர் மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.