கடலூர் மாவட்டத்தில் உள்ள சேமகோட்டை கிராமத்தில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இதில் அருள்பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சந்தியா தனது மாமியாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சந்தியாவின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த சந்தியா கூச்சலிட்டார். மேலும் பீரோவில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை. சந்தியாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.