கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதிகள் தம்பிராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த தம்பி ராஜனுடன் ஜெமிலா பேசாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தம்பிராஜனின் மகன் பிறந்தநாளை குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.

ஆனால் தம்பிராஜனை கொண்டாட்டத்திற்கு அழைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பிராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பிராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.