கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனிசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.