மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ராஜ்குமார்-வாசுகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான வாசுகிக்கு கடந்த 26-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும், சேயும் உடல் நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று பகலில் வாசுகி தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.