கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை ஆவின் பாலகம் பின்புறம் பி.ஏ.பி மெயின் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் சுரங்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.