திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் மனைவி இறந்து விட்டார். நேற்று மாலை ராஜவல்லிபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குருநாதன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி குருநாதன் இறந்துவிட்டார்.

இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குருநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.