கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் கிரிஷ் பிதோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இவருக்கு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது கீர்த்தனா கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தனாவிடம் கிரிஷ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்த பணம், நகை கேட்டு தொந்தரவு அளித்தனர். இதனால் அவர் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிஷ் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கீர்த்தனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிரிஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.