அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தரணிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு சொல்லவிருந்தார். நேற்று மதியம் தண்ணீர் பிடிப்பதற்காக தரணிஷ் மொபட்டில் சிறுநிலா சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தரணிஷ் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தரணிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.