திருச்சி மாவட்டத்திலுள்ள மலைக்கோட்டை அரச மர தெருவில் லோகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு லோகேஸ்வரிக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் லோகேஸ்வரி மலைக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு மனதளவிலும், உடலளவிலும் சித்திரவதை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் சீனிவாசன், அவரது தந்தை நடராஜன், தாய் மல்லிகா, சகோதரிகள் காயத்ரி, திவ்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.