கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டையன்விளை பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குமாரவிளை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தகுமார் தனது நண்பரான பால்ராஜ் என்பவருடன் ஒரு கோவில் முன்பு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தகுமார் திடீரென தனது பாக்கெட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி சாந்தகுமார் மயங்கி விழுந்ததை கண்டு பால்ராஜ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சாந்தகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.