கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் கொத்தனாரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனை கலைச்செல்வியும், அவரது மகளும் தட்டி கேட்டனர்.

இதனால் கோபமடைந்த மணிகண்டன் தனது 8 வயது மகளை அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்ததும் கலைச்செல்வி தனது கணவருடன் வாக்குவாதத்தை ஈடுபட்டுள்ளார். பின்னர் உடல் கருகிய நிலையில் மணிகண்டன் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டன் போதையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தாரா? அல்லது தகராறு ஏற்பட்டதால் கலைச்செல்வி தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.