திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி-கும்பிளம்பாடு ரோட்டில் சுண்டவிலை ரங்கநாதபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதற்கிடையே கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த நபர் கும்பிளம்பாடு பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் 450 கிலோ ரேஷன் அரிசி, கார் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.