விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே சென்றபோது கார் சாலையோரம் குவிந்து கிடந்த ஜல்லி கற்கள் மீது ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த காரில் வந்த ரிஷி(19) சசிதரன்(19) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மீட்பு வாகனம் மூலம் காரை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.