திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை வந்து அடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது என்ஜினில் பழுது ஏற்பட்டதால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாற்று எஞ்சின் பொருத்தினர். இதனையடுத்து தாமதமாக மாலை 4.45 மணிக்கு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.