விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் இடதுபுறம் நீண்ட நாட்களாக பயன்பாட்டின்றி பாழடைந்த வகுப்பறை கட்டிடம் இருக்கிறது. அங்கு பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மர்ம நபர்கள் யாரோ வகுப்பறையில் இருந்த குப்பைக்கு தீ வைத்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வகுப்பறையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.