கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றார். இதனால் போலீசார் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்(34) என்பது தெரியவந்தது. இவர் 4 லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருளை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.