கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 25 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.